உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

கடலுார் : கடலுாரில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு உயர் மருத்துவ சேவை முகாம் துவக்க விழா நடந்தது. கடலுார் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை,கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அனு, டி.ஆர்.ஓ., ராஜசேகரன்,துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) குமார், மாவட்ட சுகாதார துணைஇயக்குநர் பொற்கொடி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை