ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டியில் முதலிடம்
மந்தாரக்குப்பம்: நெய்வேலி பாரதி விளையாட்டரங்கில், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான எறிபந்து போட்டி நடைபெற்றது. இதில் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில், கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி கல்வி குழும இயக்குநர் ஜெய்சங்கர், இயக்குநர் தினேஷ், பள்ளி முதல்வர் சுதர்சனா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்