மேலும் செய்திகள்
கடலுாரில் 102 டிகிரி வெயில்
21-Jun-2025
கடலுார் : கடலுாரில் நேற்று வெப்பம் அதிகரிப்பால் வெயில் 101.1 சதமடித்ததால் பொதுமக்கள் புழுக்கத்தினால் அவதிப்பட்டனர். தமிழகத்தில் வெயில் வழக்கத்தை விட 4 டிகிரி வரையில் கூடுதாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துது. அதன்படி பகல் பொழுதில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது. நேற்று காலை முதல் அனல் காற்று வீசியது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக 101.1 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்பக்காற்றினால் அவதிப்பட்ட மக்கள் குளிர்பானக்கடைகளில் குவிந்தனர்.
21-Jun-2025