உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொபட்டில் வைத்திருந்த ரூ.3.43 லட்சம் திருட்டு

மொபட்டில் வைத்திருந்த ரூ.3.43 லட்சம் திருட்டு

கடலுார்: கடலுாரில் மொபட்டில் வைத்திருந்த 3.43 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் அடுத்த சித்திரைப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் நாகப்பன், 55; மீனவர். இவர் நேற்று மதியம் 1:00 மணியளவில், மொபட் டிக்கியில் 3 லட்சத்து 43 ஆயிரம் வைத்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வங்கிக்கு சென்றார். பின், திரும்பிவந்து பார்த்தபோது, மொபட் டிக்கியை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை