உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு

மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு

விருத்தாசலம்; விவாகரத்து கோரிய மருமகளை வீட்டிற்குள் விட மறுத்து மிரட்டிய மாமனார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜான்சன் இளையராஜா மனைவி ஜெனிதா, 31; கணவர் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், கடந்த வாரம் கணவர் வீட்டிற்கு சென்ற ஜெனிதாவை, மாமனார் ரபேல், 60; மற்றும் உறவினர்கள் ஆபாச மாக திட்டி, வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், ரபேல் உள்ளிட்ட மூவர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை