உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிப்பர் லாரி பறிமுதல் 

டிப்பர் லாரி பறிமுதல் 

விருத்தாசலம்: கூழாங்கல் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ஜீவா தலைமையிலான அதிகாரிகள் நேற்று பொன்னேரி புறவழிச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர்.அதில், அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை