உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகையிலை பொருள் விற்றவர் கைது

புகையிலை பொருள் விற்றவர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் நேற்று சின்னகோட்டுமுளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிச்சமுத்து, 70; என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, பிச்சமுத்துவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி