சாலை விபத்தில் வியாபாரி பலி
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விபத்தில் சிக்கிய திருச்சி மிட்டாய் வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்சி, தென்னுார், காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் ேஷக்மைதீன், 55; மிட்டாய் வியாபாரி. விருத்தாசலம் பகுதியில் மிட்டாய் வியாபாரம் செய்துவிட்டு, விருத்தாசலம் செல்வராஜ் நகர் சங்கர், 52, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற பல்சர் பைக் மோதியதில், இருவரும் படுகாயமடைந்தனர். ேஷக் மைதீன் மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறந்தார். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.