உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்நடை மருந்தகத்திற்கு சொந்த கட்டடம் தேவை

கால்நடை மருந்தகத்திற்கு சொந்த கட்டடம் தேவை

பெண்ணாடம் : வடகரை கால்நடை மருந்தகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என கால்நடை வளர்ப்போர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த வடகரை ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கால்நடைத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில் தற்காலிகமாக கால்நடை மருந்தகம் துவங்கப்பட்டது. இதன் மூலம் வடகரை, நந்திமங்கலம், கோனுார், தாழநல்லுார், அருகேரி, எரப்பாவூர் உட்பட 10 கிராம மக்கள் தங்களின் ஆடு, மாடுகளுக்கு நோய் தாக்குதல் மற்றும் உடல் நிலை பாதிப்பு ஏற்படும் போது அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கால்நடை மருந்தகத்திற்கு போதிய இடவசதி இல்லாததால் ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் உயிரிழக்கும் நிலை ஏற்படுவதால் கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர். எனவே, வடகரை கால்நடை மருந்தகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டி கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்க கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை