கால்நடை மருந்தகத்திற்கு சொந்த கட்டடம் தேவை
பெண்ணாடம்: வடகரையில் கால்நடை மருந்தகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடம் அடுத்த வடகரை கிராம மக்கள் அதிகளவில் கால்நடைகளை வளர்க்கின்றனர். கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், அதே பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு ஓட்டிச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். கால்நடை மருந்தகம் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்தில் இயங்குகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் கால்நடை களுக்கு சிகிச்சையளிக்க சிரமம் ஏற்படுகிறது. எனவே, கால்நடை மருந்தகத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.