உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஜயகாந்த்  பிறந்த நாள் கல்வி உபகரணம் வழங்கல்

விஜயகாந்த்  பிறந்த நாள் கல்வி உபகரணம் வழங்கல்

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாப்பனப்பட்டு, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கு ம் நிகழ்ச்சி நடந்தது. கெங்கைகொண்டான் பேரூராட்சி தே.மு.தி.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தலைவர் முத்து குமார், பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். முன்னாள் அவைத் தலைவர் அழகுவேல், பாபு ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினர். தலைமை ஆசிரியர் தேன்மொழி, கட்சி நிர்வாகிகள் தட்சாணமூர்த்தி, சுரேஷ், கிருபா, பாலு, அருண், பழனி, உட்பட பலர் பங்கேற்றனர் இதேப் போன்று பெரியாக்குறிச்சி உட்பட பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ