உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் 

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் 

பண்ருட்டி : பண்ருட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில் ராமநவமி முன்னிட்டு ராமர் - சீதாதேவி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமநவமி முன்னிட்டு நேற்று காலை 9:30 மணிக்கு உற்சவர் ராமர் - சீதாதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 10:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு ராமர் - சீதாதேவி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு ராமர்-சீதாதேவி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை