உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாவட்டத்தில் பரவலான மழை பரங்கிப்பேட்டையில் 25.மி.மீ., பதிவு

 மாவட்டத்தில் பரவலான மழை பரங்கிப்பேட்டையில் 25.மி.மீ., பதிவு

கடலுார்: மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக பரங்கிப்பேட்டை யில் 25 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் இருந்து துாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை நேற்று காலை 8:30மணி வரை பெய்த மழையளவு வருமாறு: (மி.மீ., அளவில்) பரங்கிப்பேட்டை 25.1, சிதம்பரம் 20.1, லால்பேட்டை 5.0, அண்ணாமலைநகர் 4.0, கலெக்டர் அலுவலகம் 3.0, கடலுார் 2.8, புவனகிரி 2, காட்டுமன்னார்கோவில். இதில் அதிகபட்ச மழை பரங்கிப்பேட்டையில் பதிவானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி