மேலும் செய்திகள்
மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
17-Mar-2025
தந்தை, மகன் தாக்கு 2 பேர் கைது
26-Feb-2025
நடுவீரப்பட்டு; திரக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சக்கரை மனைவி சுந்தரி,50; இவர் நேற்று முன்தினம் இரவு வசனாங்குப்பம்-பத்திரக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அருகில் சென்ற போது, பின்னால் வந்த டிராக்டர், சுந்தரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுந்தரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Mar-2025
26-Feb-2025