கடலுாரில் ரூ.22.15 கோடியில் புதிய மேம்பாலப் பணி தீவிரம்
கடலுார்: கடலுார் கெடிலம் ஆற்றில் ரூ. 22.15 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடலுார் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, இரும்பு பாலம் மூலம் புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து இருந்து வந்தது. நுாறு ஆண்டுகள் பழமையான இந்த பாலம் சேதமடைந்ததால், இதன் அருகில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு, வாகன போக்குவரத்து சென்று வருகிறது. இந்நிலையில், இரும்பு பாலத்தை இடித்துவிட்டு, 22.15 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது பைல் பவுண்டேஷன் அமைத்து, துாண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.