உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சென்ட்ரிங் தகடு விழுந்து தொழிலாளி பலி

சென்ட்ரிங் தகடு விழுந்து தொழிலாளி பலி

பண்ருட்டி : சென்ட்ரிங் தகடு விழுந்து தொழிலாளி இறந்தார்.பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் பாலு,64; சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த 13ம் தேதி எல்.என்.புரம் வ.உ.சி. நகரில் உள்ள ஒரு வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சென்ட்ரிங் தகடு அவர் மீது விழுந்தது.இதில், பலத்த காயமடைந்த அவர், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புதுச்சேரி ஜிப்மரில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி