உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

விருத்தாசலம் : கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 354ம் ஆண்டு ஆராதனை விழா நடக்கிறது. கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 354ம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு வரும் 10ம் தேதி பூர்வ ஆராதனை, மாலை 6:00 மணிக்கு ராஜீவி கணேஷ் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், 11ம் தேதி மத்ய ஆராதனை நிகழ்வாக காலை 9:00 மணிக்கு பாலச்சந்தர், பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு வாய்ப்பாட்டு வித்யா கல்யாணராமன், வயலின் வெங்கடசுப்ரமணியன், மிருதங்கம் ரோகித் பிரசாத் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஸ்ருதி பட் வாய்ப்பாட்டு, வயலின் லட்சுமி, மிருதங்கம் ரோகித் பிரசாத் ஆகியோரின் உத்ர ஆராதனை நிகழ்வு நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ