பாலியல் சீண்டல் வாலிபர் கைது
பண்ருட்டி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த கணிசபாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் பாலா,19; கூலித் தொழிலாளி. இவர், 8ம் வகுப்பு பயிலும் 13வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து பாலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.