உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி

கடலுார்: பஸ்நிலையம் அருகே தென்னை மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து இறந்தார். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் சங்கர்,28; கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூர் டாஸ்மாக் கடை அருகில் இருந்த தென்னைமரம் ஒன்றில் தேங்காய் பறிக்க ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். அதில் சங்கர் அதே இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி