மாணவிக்கு பாலியல் தொந்தரவுஆசிரியர் போக்சோவில் கைது
மாணவிக்கு பாலியல் தொந்தரவுஆசிரியர் போக்சோவில் கைதுஅரூர்:பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியரை, போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில், 13 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவிக்கு, அங்கு பணிபுரியும் மொரப்பூர் கலைஞர் நகரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் முல்லைமொழி, 23, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் முல்லைமொழியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.