உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு

வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு

குளித்தலை: வாய்க்காலில் குளிக்க சென்ற பெண், தவறி விழுந்து இறந்தார்.குளித்தலை அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்.. தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை, 28, பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது அக்கா லதா, 35. இவரது கணவர் செல்வராஜ். கடந்த, 5 காலை 7:00 மணியளவில் வாய்க்காலில் துணிகளை துவைப்பதற்காக, லதா சென்றார். மகிளிப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்காலில், துணி துவைத்து கொண்டிருந்தார். பின் அவர் குளிக்க சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரை காணவில்லை. இந்நிலையில், மகிளிப்-பட்டி உடையான் தோட்டம் அருகே சடலமாக, நேற்று முன்-தினம் மாலை லதா கிடந்துள்ளார். போலீசார் சடலத்தை கைப்-பற்றி. உடல் கூறு ஆய்வுக்காக, குளித்தலை அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்