உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவில் உண்டியலில் துளையிட்டு திருட்டு

கோவில் உண்டியலில் துளையிட்டு திருட்டு

பாப்பிரெட்டிப்பட்டி;கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில் பழமையான சோமேஸ்வரர் உடனுறை சோமசுந்தரி கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், 45, உள்ளார். நேற்று காலை வழக்கம் போல பூஜைக்கு கோவிலை திறந்தார். அப்போது, கோவிலுக்குள் வைத்திருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்படாமல், பின் பகுதியில் ஓட்டை போட்டு உண்டியல் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் மணிகண்டன், கோவிலில் ஆய்வு செய்தார். புகார் படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்தாண்டு இதே மாதத்தில், உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

இராம தாசன்
ஜூலை 17, 2024 07:31

எதறகு இவ்வளவு கஷ்டம் - சேகர் பாபுகிட்ட சொல்லியிருந்தால் சாவியே கிடைத்து இருக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை