உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஜல்லி, மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ஜல்லி, மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜே.காருப்பள்ளி பிரிவு ரோட்டில், வி.ஏ.ஓ., மோகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, கெலமங்கலத்தில் இருந்து ஓசூருக்கு அனுமதி சீட்டு இல்லாமல், 5 யூனிட் ஜல்லியை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.* போச்சம்பள்ளி அடுத்த காட்டகரம் வி.ஏ.ஓ., லெனின் மற்றும் அதிகாரிகள் சந்துார், 4 ரோட்டில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. லெனின் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை