உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பட்டுக்கூடு அங்காடியில் ரூ.10.31 லட்சத்துக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.10.31 லட்சத்துக்கு ஏலம்

தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதி-களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்-கின்றனர்.கடந்த ஜூன் மாதத்தில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், 28 விவசாயிகள், 56 குவியல்களாக, 2,227 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்-தனர். இது, 369 முதல், 505 ரூபாய் வரை சராசரி-யாக, 463 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 10.31 லட்சம் ரூபாய். கடந்த ஒரு மாதத்தில் நடந்த இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 15,466 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை