உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் 1.35 லட்சம் கன அடி நீர்வரத்து வெள்ளப்பெருக்கால் குளிக்க, பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லில் 1.35 லட்சம் கன அடி நீர்வரத்து வெள்ளப்பெருக்கால் குளிக்க, பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடியாக அதிகரித்ததால், அங்குள்ள அருவிகளை மூழ்கடித்தபடி, தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.கர்நாடகா மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.ஏற்கனவே, அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 1.16 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வினாடிக்கு, 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 10:00 மணிக்கு, 1.15 லட்சம் கன அடியாகவும், மாலை, 4:00 மணிக்கு, 1.35 லட்சம் கன அடியாகவும் அதிகரித்தது.இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, காவிரி கரையோரத்தில் ஆற்றில் யாரும் இறங்காதவாறு போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை