அரசு கல்லுாரியில் துாய்மை பணி
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், துாய்மை இந்தியா திட்ட முகாம் கல்லுாரி முதல்வர் தீர்த-லிங்கம் தலைமையில் நடந்தது. இதில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கல்லுாரி வளாகத்தில் துாய்மை பணி மேற்-கொண்டனர். தொடர்ந்து, துாய்மை இந்தியா விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றனர். முகாம் ஏற்பாடு-களை, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் அன்பரசன் செய்திருந்தனர்.