உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.2.50 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்

ரூ.2.50 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்

அரூர்,:அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று, 2.50 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 21 விவசாயிகள், 35 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 7,209 முதல், 7,499 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 35 குவிண்டால் பருத்தி, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை