ரூ.3.66 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம், இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 33 விவசாயிகள், 53 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 7,196 முதல், 7,750 ரூபாய் வரையும், டி.சி.எச்., ரகம் குவிண்டால், 9,246 முதல், 9,586 ரூபாய் வரையும் விற்பனையாகின. மொத்தம், 53 குவிண்டால் பருத்தி, 3.66 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.