மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
13 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
13 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
13 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
தர்மபுரி: 'தர்மபுரி அருகே ஓய்வு பெற்று அரசு அதிகாரிகளிடமிருந்து பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என எஸ்.பி.,யிடம் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் மனு அளித்தனர். தர்மபுரி அடுத்த கடத்தூர் வேப்பிலைப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்று அரசு அலுவலர்கள் குழந்தை எஸ்.பி., கணேஷமூர்த்தியிடம் அளித்த மனு விபரம்: ஓய்வு பெற்ற பின் அரசு வழங்கிய ஓய்வு பணம் ஏழு லட்சத்தை வங்கியில் போடுவதற்காக தர்மபுரி வந்த போது தர்மபுரி வெண்ணாம்பட்டியை சேர்ந்த செல்வகுமார், சில்லாரஹள்ளியை சேர்ந்த காளி, பன்னப்பட்டியை சேர்ந்தவர்கள் தமிழ்செல்வன், செல்வம், இண்டூரை சேர்ந்த அஜீத் ஆகியோர் வழிமறித்து வெளிநாட்டு வங்கியில் பணத்தை போட்டால், தங்கள் பணம் ஒரு ஆண்டில் இரட்டிப்பு ஆகும். மேலும் மாதம் தோறும் கூடுதல் வட்டிக்கான செக் வரும் என ஆசை வார்த்தை கூறினர். நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பிளாங் செக் தந்தனர். இதை நம்பி ஏழு லட்சத்தை அவர்களிடம் அளித்தேன். இதே போல அய்யாசாமி, ராமசாமி ஆகிய ஓய்வு பெற்று அதிகாரிகளும் இவர்களிடம் பணம் போட்டுள்ளனர். ஆரம்பத்தில் மூன்று மாதம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செக் வந்தது. பின் செக் வரவில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்டால் சரியான பதில் அளிக்கவில்லை. எனது பணத்தை அவர்கள் நூதன முறையில் மோசடி செய்ததும், பலரிடம் லட்சக்கணக்கில் அவர்கள் பணம் பெற்று ஏமாற்றியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. பண மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தர வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. * பண மோசடி: தர்மபுரியில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்த இருவர் மீது தர்மபுரி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தர்மபுரி அடுத்த இருமத்தூரை சேர்ந்த அண்ணாமலையிடம் கடந்த ஆறு மாதத்துக்கு முன் தர்மபுரியில் பைனான்ஸ் நடத்தி வந்த சுரேஷ்குமார், ஜெயக்குமார் ஆகிய இருவரும் பணத்தை ஆறு மாதத்தில் வட்டிக்கு விட்டு இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை வாங்கினர். இதுவரை அண்ணாமலையிடம் வாங்கிய பணத்துக்கு 20,000 ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்தனர். தனது பணத்தை மீட்டு தருமாறு நேற்று அண்ணாமலை எஸ்.பி.,யிடம் அளித்த புகாரின் பேரில் தர்மபுரி போலீஸார் பைனான்ஸ் நடத்தி வந்த சுரேஷ்குமார், ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
01-Oct-2025