வயல் வரப்பில் வந்தபோது தவறி விழுந்த விவசாயி சாவு
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள டோக்குபோதன-ஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம், 56. இவர் மனைவி சின்னபொண்ணு, 50. தம்பதிக்கு அவர்களின் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த, 25 அன்று காலை, 7:00 மணிக்கு சாமிசெட்டிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட கமலநத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலத்திலிருந்து ராகி தாள்களை எடுத்துக்கொண்டு, வரப்பில் சண்முகம் நடந்து வந்தபோது, தவறி கீழே விழுந்தார். இதில் அவரின் பின் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் கடந்த மாதம், 26 அன்று இரவு, 7:20 மணிக்கு உயிரிழந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.