உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விபத்தில் உயிரிழந்த பா.ம.க., நிர்வாகி குடும்பத்துக்கு நிதியுதவி

விபத்தில் உயிரிழந்த பா.ம.க., நிர்வாகி குடும்பத்துக்கு நிதியுதவி

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்மாபாளையம் பா.ம.க., கிளை செயலாளர் செந்தமிழ்செல்வன், சில தினங்களுக்கு முன் விபத்தில் இறந்தார். இவரது குடும்பத்திற்கு, பா.ம.க., சார்பில் உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, 7 ஆடுகள் மற்றும் குடும்ப நல நிதி உதவி வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மைக்கண்ணன், மாவட்ட நிர்வாகி கார்த்திக் தமிழ்வாணன், நிர்வாகிகள் நடராஜன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி