ஊருக்குள் சிறுத்தைகள் நடமாட்டம் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
பாலக்கோடு: ஊருக்குள் சிறுத்தைகள் சுற்றி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்-புடன் இருக்க, வனத்துறையினர்- ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதி வாழைத்தோட்டம் ஜோடிசுனை அருகே, 3 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். சிறுத்-தைகள் தினமும் அப்பகுதி வீடுகளில் நாய், கோழிகளை குறி-வைத்து வேட்டையாடி வருகிறது. கடந்த, 17 நள்ளிரவு வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த வினாயகம் என்பவரது வீட்டின் முன்பிருந்த நாயை, சிறுத்தை கவ்வி சென்ற, 'சிசிடிவி' காட்சிகள் பொதுமக்களுக்கு பீதியை ஏற்-படுத்தியது. அப்பகுதியிலுள்ள சாலை வழியாக மாணவர்கள் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க, அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து, வாழைத்தோட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், வனப்பகுதிக்குள் செல்லவோ, கால்நடைகளை மேய்ச்ச-லுக்கு அழைத்து செல்லவோ வேண்டாம் எனவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும், பாலக்கோடு வனத்துறை-யினர் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வரு-கின்றனர்.