உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தர்மபுரி: இந்திய அரசின், மத்திய பனைப்பொருட்கள் நிறுவனம், கே.வி.ஐ.சி., சார்பில் தர்மபுரி, இ.பி.ஆர்., எஜூகேஷன் பாயின்ட், நெ. 7, 2வது மாடி, ஜே.ஆர்.காம்ப்ளக்ஸ், சாந்தி ஹார்டுவேர்ஸ் எதிரில், செந்தில்குமார் டிபார்ட்மென்டல் ஸ்டோர் அருகே, வாசுகவுண்டர் வீதியிலுள்ள பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் மே, 6ம் தேதி முதல், மே, 16ம் தேதி வரை, 11 நாட்கள் பயிற்சி நடக்கிறது. இதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதம் குறித்து, பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவர்கள், 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ், மற்றும் பயிற்சி கட்டணம். 5300 ரூபாய் ஜி.எஸ்.டி., 18 சதவீதம் சேர்த்து மொத்தம், 6,254 ரூபாய் செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்கள் பெற, 94437 28438 என்ற மொபைல் எண்ணில் கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை