உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி மாணவிக்கு தங்க நாணயம் பரிசு

அரசு பள்ளி மாணவிக்கு தங்க நாணயம் பரிசு

தர்மபுரி: பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவில், இப்பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்ருதி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். அவர் தமிழில், 98 ஆங்கிலம், 96, இயற்பியல், 100, வேதியியல், 100, தாவரவியல், 98, கணிதவியல், 98 என மொத்தம், 600க்கு, 590 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகளில் படித்த மாணவியரில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். அவருக்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன், அந்த மாணவியை பாராட்டி, 8 கிராம் தங்க நாணயம் வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவியர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்