உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனுக்கள் மீது ஐ.ஜி., விசாரணை

பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனுக்கள் மீது ஐ.ஜி., விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையில் நடக்கிறது.தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில், பொது-மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இதில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், பொதுமக்களின் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார். அப்போது, சேலம் டி.ஐ.ஜி., உமா உடனிருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த குறைதீர் முகாமில், 77 மனுக்கள் பெறப்பட்டு, 73 மனுக்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்தனர். இதில், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ