மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திருப்பூர்
13-May-2025
காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கயிறுகாரன்கொட்-டாயில் உள்ள செல்வ கணபதி, ஜடை மாரியம்மன் கோவில் கும்-பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு மங்-கள இசை மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தீர்த்த குடங்கள், முளைப்பாரிகை ஊர்வலம் நடந்-தது. இரவு, 10:00 மணிக்கு முதற்கால யாக வேள்வி பூஜைகள், செல்வ கணபதி, ஜடை மாரியம்மனுக்கு யந்திர, நவரத்தின ஸ்தாபனம், அஷ்டபந்தன எண் வகை மருந்து சாற்றுதல் நடந்-தது. நேற்று காலை, 5:30 மணிக்கு வேதபாராயணம், புண்ணியாகவா-சணம், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, யாத்ரா தானம், திருக்குடங்கள் புறப்பாடு, விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு செல்வ கணபதியுடன், ஜடை மாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
13-May-2025