குழந்தையுடன் தாய் மாயம்
அரூர், அரூர் அடுத்த புதுவளவுவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 37. இவர், கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா, 30, என்ற மனைவியும், 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 16ம் தேதி பானுப்பிரியா மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, யாருடன் பேசுகிறாய் எனக்கேட்டு அவரிடமிருந்து மொபைல்போனை ராமகிருஷ்ணன் வாங்கி வைத்துள்ளார். அடுத்த நாள் காலை, 8:30 மணிக்கு மருத்துவமனைக்கு செல்வதாக பானுப்பிரியா, அவரது மூத்த மகள் ராகியினிடம் கூறிவிட்டு, 2 வயது மகனை துாக்கிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.