உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்

இஸ்லாமியர்கள் ஈத்காவிற்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொம்மஹள்ளி பஞ்.,ல் இஸ்-லாமியர்களின் ஈத்காவிற்கு, பாலக்கோடு, அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ., அன்பழகன் தன் சட்ட-சபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5.75 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தி-ருந்தார்.அதையடுத்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., அன்பழகன் நேற்று பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார். இதில், அப்பகுதியை சேர்ந்த முபாரக், அனீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் செந்தில்-குமார், செல்வராஜ், முன்னாள் சேர்மன் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை