ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு மையம்
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தமாணிக்கோம்பையில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டது. இதை நேற்று, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர்கள், தமிழ்மணி, பெரிய கண்ணு, வஜ்ரவேல், நகர செயலாளர் தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.