உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 3 ஆண்டுக்கு முன் உடைந்த தடுப்பணைகள் அதிகாரிகள் நடவடிக்கை இல்லையென புகார்

3 ஆண்டுக்கு முன் உடைந்த தடுப்பணைகள் அதிகாரிகள் நடவடிக்கை இல்லையென புகார்

நல்லம்பள்ளி: கழனிகாட்டூரில் நீர் ஆதாரமாக விளங்கிய, 3 தடுப்பணைகள் மழையால் அடித்து சென்ற நிலையில், நீரை தேக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், நாகர்கூடல் பஞ்., கழனிகாட்டூரில் தண்ணீரை தேக்கி வைக்க, நீரோடைகளில் கட்-டப்பட்டிருந்த, 3 தடுப்பனைகள் கடந்த, 2022 ஆக.‍, 2 அன்று பெய்த கனமழையால், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்-லப்பட்டன. இவை சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்-மட்டம் உயர முக்கிய நீர் ஆதாரமாக இருந்தன. இதனால், கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருந்தது. தடுப்-பணைகள் உடைந்ததால், நீரோடையில் வந்த நீர் முழுவதும் நேர-டியாக, நாகாவதி அணைக்கு சென்று விட்டது. இதனால், கடந்த, 2 ஆண்டுகளாக கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்-டது. தடுப்பணைகள் அடித்து செல்லப்பட்டது குறித்து, நாகர்-கூடல் பஞ்., நிர்வாகம் சார்பில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வரும் பருவமழையில் மழைநீரை சேமிக்க, தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ