உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புட்டிரெட்டிப்பட்டியில் பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் இன்று மூடல்

புட்டிரெட்டிப்பட்டியில் பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் இன்று மூடல்

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் சீரமைப்பு பணிக்காக இன்று மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், மாற்று சாலையை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம், கடத்தூர்-அரூர் செல்லும் வழியில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட்டில், இரு ரயில் பாதைகளுக்கும் இடையே கான்கிரீட் தரைத்தளம் சீராக இல்லாமல் மேடும், பள்ளமுமாக இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.நேற்று இதை, சேலம் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சஞ்சீவி, பகுதி உதவி பொறியாளர் ஜவஹர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின் ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்காக, ரயில்வே கேட் இன்று காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து எச்சரிக்கை பலகை ரயில்வே கேட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக வரும் வாகனங்கள், பொதுமக்கள் மாற்று பாதையில் செல்லுமாறு ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை