உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் அங்காளம்மனுக்கு அமாவாசையில் சிறப்பு பூஜை

தர்மபுரியில் அங்காளம்மனுக்கு அமாவாசையில் சிறப்பு பூஜை

தர்மபுரி, நவ. 2-அமாவாசை நாளான நேற்று, தர்மபுரியில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது.தர்மபுரி அடுத்த வெளிபேட்டை தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடப்பது வழக்கம். இந்நிலையில், ஐப்பசி மாத அமாவாசை நளான நேற்று அம்மனுக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின், அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து உற்சவர் அம்மன் வெளிபேட்டை தெரு, கடைவீதி, மதிகோண்பாளையம், குப்பாண்டி தெரு வழியாக ஊர்வலம் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், நெசவாளர்காலனி, சவுடேஸ்வரி அம்மன் கோவில், எஸ்.வி.,ரோடு அங்காளம்மன் கோவில், கந்தசாமிவாத்தியார்தெரு ஓம்சக்தி அம்மன் கோவில், ஆட்டுகாரம்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி