உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நீரில் மிதக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்க விண்ணப்பித்தவர்கள் அச்சம்

நீரில் மிதக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்க விண்ணப்பித்தவர்கள் அச்சம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக, அதியமான்-கோட்டை, மோதுார், முக்குளம், கொண்டஹரஹள்ளி, மோலை-யானுார், நம்பிப்பட்டி, பீச்சான்கொட்டாய் ஆகிய பகுதிகளில், 247 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடிகள் கட்டி முடிக்கப்-பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இதில், தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில், பொதுப்பிரிவி-னருக்கு, அடுக்குமாடி கட்டும் பணி, பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. பிற பகுதிகளில், அடுக்குமாடி குடியி-ருப்பு கட்டும் பணி முடிந்த நிலையில், அதியமான்கோட்டையில் பணி துவங்காததற்கு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்-தது. மேலும், அதியமான்கோட்டையில் அடுக்குமாடி கட்டப்-படும் இடம் ஏரியில், சவுடு மண் உள்ள பகுதியாகவும் உள்-ளதால், தரமான முறையில் அடுக்குமாடி குடியிருப்புக்களை கட்ட கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கட்டுமான பணிகள், 2022 நவ.,ல் துவங்கியது.பணிகள், 2 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் முழுமை-யாக முடியவில்லை. கடந்த ஆக., 11 அன்று அதியமான்-கோட்டை அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகள் பெற விரும்-புவோர் விண்ணப்பிக்க, மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவித்தி-ருந்தார். நவ., 30, டிச., 1, 2 ஆகிய 3 நாட்கள் பெஞ்சல் புயல் தாக்-கத்தால், தர்மபுரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிக நீர்வரத்தால், நேற்று முன்தினம், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட அதியமான்கோட்டை ஏரி, முழு கொள்ளளவை எட்டி-யது. இதனால், ஏரியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் சாலை மற்றும் தரைதளத்திலுள்ள வீடுகள் நீரில் மிதக்-கின்றன. மொத்தம், 528 வீடுகளில் காலியாக உள்ள, 523 வீடு-களை வாங்க விண்ணப்பித்த பயனாளிகள் அச்சமடைந்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை