உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அடிலம் ஏரியில் மண் கடத்திய இரண்டு வாகனங்கள் பறிமுதல்

அடிலம் ஏரியில் மண் கடத்திய இரண்டு வாகனங்கள் பறிமுதல்

காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அடிலம் கிராமத்தில் உள்ள ஏரியில் மண் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காரிமங்கலம் தாசில்தார் மனோகரன் அடிலம் ஏரிக்கு சென்றார்.அப்போது சட்டவிரோதமாக ஏரியில் மண் அள்ளி கொண்டிருந்தது தெரிய வந்தது, அதிகாரிகளை கண்டதும் டிராக்டர் மற்றும் பொக்லைன் டிரைவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்து காரிமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மண் கடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை