உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உழவர் சந்தைகளில் காய்கறி ரூ.37 லட்சத்துக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் காய்கறி ரூ.37 லட்சத்துக்கு விற்பனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகளில், நேற்று புரட்-டாசி மாதம், 4வது சனிக்கிழமையையொட்டி, 37 லட்சம் ரூபாய்க்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது.தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 6 உழவர் சந்தைகளில் நேற்று புரட்-டாசி, 4வது சனிக்கிழமையை ஒட்டி, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது. கடந்த அக்., 4ம் தேதி சனிக்கிழமையில் மாவட்டத்திலுள்ள, 6 உழவர் சந்தைகளில் மொத்தம், 113 டன் காய்கறிகள், 9 டன் பழங்கள் ஆகியவை மொத்தம், 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று, 294 விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள், தர்மபுரி உழவர் சந்தையில், 37 டன், பாலக்-கோட்டில், 12 டன், பென்னாகரம், 7, அரூர், 11, ஏ.ஜெட்டி-ஹள்ளி, 20, காரிமங்கலத்தில், 4 டன் காய்கறிகள் என மொத்தம், 95 டன் காய்கறிகள், 8 டன் பழங்கள் என மொத்தம், 37 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதை, 21,472 நுகர்வோர் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை