மேலும் செய்திகள்
ஒகேனக்கல் காவிரியாற்றில் 5வது நாளாக குளிக்க தடை
01-Jul-2025
ஒகேனக்கல் ;ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 28,000 கன அடியாக குறைந்தது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி, அங்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 57,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 28,000 கன அடியாக சரிந்தது. இதனால், தண்ணீரில் மூழ்கி காணப்பட்ட ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகள் வெளியே தெரிகிறது.தொடர்ந்து, 12வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை போலீசார், மடம் செக்போஸ்டிலேயே திருப்பி அனுப்பி வருகின்றனர்.
01-Jul-2025