மேலும் செய்திகள்
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
21-Feb-2025
திண்டுக்கல்: அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிேஷம் வழிபாடுகள் நடந்தன.திண்டுக்கல் மலையடிவார பத்திரகாளியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், கோட்டைமாரியம்மன் உட்பட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நீர்நிலைகளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சிகளும் நடந்தன. குறிப்பாக கோபால சமுத்திர குளத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏராளமான மக்கள் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்ஸவர் கோதண்டராமருக்கு விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி லிங்குசாமி மடத்தில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.
21-Feb-2025