உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2 நாளில் கிலோ ரூ.25 ஆக விலை சரிந்த முருங்கை

2 நாளில் கிலோ ரூ.25 ஆக விலை சரிந்த முருங்கை

ஒட்டன்சத்திரம்:உள்ளூர் வரத்து அதிகரித்துள்ளதால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை இரு நாளில் கிலோ ஆக ரூ.25 குறைந்தது.சில மாதங்களாக உள்ளூர் பகுதியில் விளைச்சல் இல்லாததால் வெளிமாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் கொண்டுவரப்பட்டு கிலோ ரூ.100 க்கு மேல் விற்பனையானது. இந்நிலையில் சில நாட்களாக உள்ளூர் பகுதியில் முருங்கை அறுவடை ஆரம்பமாக மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. மார்ச் 10ல் கிலோ செடி முருங்கைக்காய் ரூ.50 க்கு விற்பனையானது. இரண்டு நாட்களுக்கு பின்பு நேற்று கிலோ ரூ.25 க்கு விற்பனையானது.கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில்,''இனி வரும் நாட்களில் முருங்கை வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விலை மேலும் சரிவடையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை