உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்,உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். போராட்டத்தின் முடிவில் சங்க நிர்வாகிகள் அலுவலகத்தில் மனு கொடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ