விபத்தில் கணவன் மனைவி பலி
கொடைரோடு : நிலக்கோட்டையை சேர்ந்தவர் மாணிக்கம் 59. மனைவி போதுமணி 55, உடன் டூவீலரில் நிலக்கோட்டை சென்றார். காமலாபுரம் பிரிவில் திரும்பிய போது எதிரே வந்த ஆம்னி பஸ் மோதியதில் மாணிக்கம் பலியானார். போது மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கொடைரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.